லிபியாவில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும், கைதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த மோதலின் போது சுமார் 400 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.