(FASTNEWS|COLOMBO) – லிபியாவிலுள்ள அகதிகள் முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 80 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆபிரிக்க அகதிகள் என தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட குறித்த முகாமில் 120 அகதிகள் தங்கியிருந்ததாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.