வங்காள விரிகுடா காலநிலை தொடர்பிலான சர்வதேச மாநாடு…

வங்காள விரிகுடாவில் காலநிலை தொடர்பிலான Monsoon intra – Seasonal oscillation conference on oceanogrphy of bay of Bengl என்ற சர்வதேச மாநாடு நாளை(10) கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்குகொள்ளவுள்ளனர். கடந்த காலப்பகுதியில் இலங்கையை போன்ற நாடுகள் எதிர்கொண்ட காலநிலை மாற்ற அனர்த்தத்திற்கான முக்கிய காரணம் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காலநிலையே காரணமாகும்.

விசேடமாக வங்காள விரிகுடாவின் பிரதேசத்தின் ஊடாக இடம்பெற்ற காலநிலை நகர்வு நாடுகளுக்கும் நாடுகளின் தாக்கங்களுக்கும் நேரடியாக தொடர்புபடுத்தப்பட்டிருந்தது. இது மோசன் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காலநிலை தொடர்பில் நாரா நிறுவனத்தின் தலைமையிலான ஆய்வுக்குழுவொன்று விசேட கவனம் செலுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நோற்றன் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை நாரா நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து வங்களா விரிகுடா பிரதேசத்தில் காலநிலை தொடர்பில் Monsoon intra – Seasonal oscillation conference on oceanogrphy of bay of Bengl விசேட திட்டம் ஒன்று முன்னெடுக்க்பபட்டுள்ளது.

இந்துமா சமுத்திரத்தின் பிராந்தியத்தில் மழை ,வெள்ளம் ,வறட்சி ,மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தம் முகாமைத்துவம் தொடர்பில் தீர்மானங்கள் மற்றும் அனுபவங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.

முறையாக காலநிலை எதிர்வுகூறல்களை மேற்கொள்ளுதல்,இயற்கை அனர்த்த முகாமைத்துவத்திற்கான கொள்கைரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், வங்காளவிரிகுடாவில் காலநிலை தொடர்பில் அடையாளம் காணுவதன் மூலம் கடற்றொழில் மற்றும் கடல்நடவடிக்கைகளில் பெரும் உதவியாக அமையும் என்று நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.