இலங்கை ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில், இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையை மீண்டும் முன்வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் முரண் பட்ட கருத்துக்கள் ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
2012, மே-27ம் திகதி வசிம் தாஜுதீன் அவரது வாகனத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.