(FASTNEWS | COLOMBO) – யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை தவிற, வடக்கில் மற்றுமொரு பல்கலைக்கழகத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்க்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.
வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில், இன்று (15) பங்கேற்று உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்.பல்கலையின் வவுனியா வளாகமே, இவ்வாறு ‘வன்னி பல்கலைக்கழகம்’ என பெயரிடப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.