(FASTNEWS|COLOMBO) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் அதிகளவான நிதி ஒதுக்கியுள்ளதாக வரி மற்றும் முதலீட்டு கொள்கைகளுக்கான ஆலோசகர் பி.குருகே தெரிவித்துள்ளார்.
இதன்படி, காங்கேசன்துறை, மாந்தை, பரந்தன், கோண்டாவில், கிண்ணியா, திருகோணமலை, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில கைத்தொழில் பேட்டைகளை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.