வட மேல் மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் தாதிமார், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட கூட்டு தொழிற்சங்கம் இன்று(30) காலை அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று(30) காலை 07 மணி முதல் நாளை(31) காலை 07 மணி வரையில் 24 மணி நேர வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்ணப்பிரிய தெரிவித்துள்ளார்.
விடுமுறைக் கொடுப்பனவு, நிலுவை சம்பளம் என்பன ஒரு வருட காலத்திற்குள் செலுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும், தெரிவித்துள்ளார்.