வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் அமைச்சரவை அவதானம்…

சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் குறித்து சங்கைக்குரிய கட்சிகள் மற்றும் சில அமைப்புக்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை இன்று(28) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அறியப்படுத்தப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

ஞானசார தேரருக்கு விடுதலை வழங்குமாறு அநேகமான தரப்பினர்கள் கோரிக்கைகள் விடுத்து வருகின்ற நிலையில் இது குறித்து ஜனாதிபதியின் அவதானத்திற்கு இன்று கொண்டுவரவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.