வத்தளை நடைபாதை புனரமைப்பு பணிகள் நிறைவு

வத்தளை – களு எல்ல பகுதியில் அண்மையில் உடைந்திருந்ந மெது ஓட்டப் (jogging track ) பாதையின் புனரமைப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரந்தர குடியிருப்பு வளாகம் இந்தப் பகுதியில் அமைப்பதற்கான முறையில் இந்தப் பாதை தற்போது புனரமைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புனரமைப்பு பாதை விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்று சுற்றுலா மற்றும் கிருஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் இணை செயலாளர் மிஹிரி டி சில்வா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த பாதை சரத் சிந்திக்கவின் உதவியுடன் பொதுமக்களுக்கு ஒப்படைக்கப்படும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.