வத்தளை – ஹேக்கித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பம்…

வத்தளை – ஹேக்கித்த பகுதியில் நேற்று(13) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் 24 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் இரண்டு இளைஞர்களும் உயிரிழந்துள்ள போதும், அவர்களுடன் பயணித்த பெண்ணுக்கு பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டிருந்த முரண்பாடே தாக்குதலுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.