வனப்பகுதியில் 2 சடலங்கள் மீட்பு…

இராகலை – சென்லெனாட் வனப்பகுதியிலுள்ள குகைக்குள் இருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவர்கள் 29 மற்றும் 31 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும், விலங்குகளை வேட்டையாடுவதற்காக நேற்று வீட்டிலிருந்து சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இராகலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.