வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இன்று இறுதி பிரசார பிரதான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை (14) ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு வவுனியா சூடுவேந்தபுளவிலும், மாலை 5.00 மணிக்கு பட்டானிச்சூரிலும், மாலை 4.00 மணிக்கு மன்னார் சிலாவத்துறையிலும், மாலை 6.00 மணிக்கு வங்காலையிலும், இரவு 7.30 க்கு மன்னார் எருக்கலம்பிட்டியிலும் இடம் பெறவுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,வேட்பாளருமான றிசாத் பதியுதீன் உள்ளிட்ட வேட்பாளர்கள் பலரும் இதன் போது உரையாற்றவுள்ளனர்.