கொழும்பில் இன்று(05) ஒன்றிணைந்த எதிரணி மேற்கொள்ளவுள்ள பேரணியின் போது வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்துவதற்காக இறப்பர் குண்டுகளை பயன்படுத்தி காலின் கீழ் சுடுவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
நிதியமைச்சர் குறித்த யோசனையை முன்வைத்ததாக கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பேரணி கட்டுக்கடங்காததாக மாறினால் பொதுமக்களின் சொத்திற்கும் உயிர்களிற்கும் பாதிப்பு ஏற்பட்டால் பொலிஸா இறப்பர் குண்டுகளை பயன்படுத்தி காலின் கீழ் சுடுவதற்கு தயங்க கூடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் இந்த தீர்மானம் குறித்து பாதுகாப்பு பேரவைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.