வன்முறை சம்பவங்களை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசிடம் கோரிக்கை..

(FASTNEWS| COLOMBO) – அனைத்து மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை அரசு எடுக்க வேண்டும் எனக் கோரி ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் பயங்கரவாத தாக்குதலினை தொடர்ந்து இனவாத வன்முறைகள் பதிவாகியுள்ளதாகவும், இது தொடர்பில் இலங்கை உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதன்போது ஊடகங்கள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.