அனைத்து வயோதிப மத குருமார்களுக்கும் காப்புறுதி திட்டத்தை வழங்குதல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் தேசிய பௌத்த அறிஞர் சபைக் கூட்டம் நேற்று(12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பில் தொடர்புடைய அலுவலர்களுக்கு ஆலோசனை வாங்கியுள்ளார்.
குறித்த இந்த கலந்துரையாடலில் தேசிய பௌத்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர் வண. கொட்டபிற்றியே ராகுல தேரர், பேராசிரியர் வண.கல்லேல்லே சுமணசிறி தேரர், கலாநிதி வண. அக்குரற்றியே நந்த தேரர் உள்ளிட்ட தேரர்களும் பௌத்த சாசன அமைச்சின் செயலாளர் சந்ரபிரேம கமகே உள்ளிட்ட அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
(rizmira)