புதிய அரசுக்கான 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பராளுமன்றத்தில் முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் பின்னர், விவாதம் இடம்பெற்று ஏப்ரல் மாதமளவில் வரவு – செலவுத் திட்டத்தினை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.