(FASTNEWS|COLOMBO) 2019 ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பிலான இறுதி தீர்மானமானது நாளை(04) இடம்பெறவுள்ள ஐக்கிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் தீர்மானிக்க நேற்று(02) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஐக்கிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டமானது ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் நாளை(04) மாலை 4.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.