வருடாந்தம் ரயிலில் இடம்பெறும் விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த வருடத்தில் கடந்த 8 மாத காலப்பகுதியில் புகையிரத மற்றும் புகையிரத நிலையங்களிலிருந்து தன்னை தானே [selfi] புகைப்படம் எடுத்துக்கொண்டவர்களில் 24 இளைஞர், யுவதிகள் உயிரிழந்திருப்பதாக வீதிப்பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டில் புகையிரத பாதையில் சென்று விபத்துக்குள்ளாகிய 436 பேரில் 180 பேர் உயிரிழந்துள்ளதுடன் 256 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, வாகனங்களுடன் புகையிரதம் மோதியதினால் 84 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.