அமைச்சரவை அமைச்சர்களில் மாற்றம் செய்வதற்கு முன்னதாக, யானைக் கட்சியை பிரதிநிதிதுவப்படுத்தும் சிரேஷ்ட அமைச்சரொருவர், நாட்டின் பெரிய தலைவரால் அழைத்து வரப்பட்டாராம்.
அமைச்சருடன் தனியாக கதைத்த நாட்டின் பெரிய தலைவர், அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில் உங்களை நீங்கள் தற்போது வகிக்கும் பதவியிலிருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று நேரடியாகவே சொல்லிவிட்டாராம்.
தன்னை விலக்கினால் வெளியேறிச்சென்று பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை நடத்துவேன் என, பல இடங்களில் சொல்லிக்கொண்டிருந்த அந்த அமைச்சர், நாட்டின் பெரிய தலைவர் கூறியதைக் கேட்டு அமைதியாகவே இருந்தாராம்.