வறட்சியான காலநிலையால் நாட்டின் மின் உற்பத்தி கட்டுப்பாடு…

நாட்டில் தற்போது நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் மின் உற்பத்தி வரையறுக்கப்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி வரையறுக்கப்பட்டாலும் மின் வெட்டு இடம்பெறாது என்று மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன மேலும் கூறினார்.