தற்போது நிலவுகின்ற வறட்சி காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் 7,502 குடும்பங்களைச் சேர்ந்த 28,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.பி.பண்டார தெரிவித்தார்.
வறட்சி காரணமாக இம்மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. இவ்வாறு குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு மாவட்டச் செயலாளர் பந்துல ஹரிச்சந்திரவின் ஆலோசனைக்கு அமைய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் பிரதேச சபைகளின் ஊடாக பவுசர் மூலம் குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நன்றி – சிவாணி ஸ்ரீ