வறட்சியினால் 450,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

(FASTNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 450,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக மாவட்ட செயலகங்கள் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகபம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய வறட்சி காலநிலையின் காரணமாக பொது மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.