வறட்சி காலநிலை காரணமாக மின்வெட்டு அமுலுக்கு…?

(FASTGOSSIP | COLOMBO) – நிகழும் வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி நிலைமை குறைந்து காணப்படுவதாக சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளர், சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து தெரிவிக்கையில், நிலவும் வறட்சியுடன் கூடிய காலநிலையில் நாளாந்த மின்பாவனையின் கேள்வி அதிகரித்துள்ளது. எனினும் இதன் காரணமாக மின் வெட்டினை அமுல்படுத்த இதுவரையில் தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.