வற் சட்டமூலமானது அரசியலமைபிற்கு முரணானது.

வற் (பெறுமதி சேர்க்கப்பட்ட வரி) சட்டமூலம், இலங்கை அரசியலமைப்பின் பிரிவுகளுக்கு அமைவாக முன்வைகக்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றம், சபாநாயகருக்கு இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இதேவேளை, மாற்று சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.