அடுத்த வாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் புலனாய்வுப் பிரிவினர் றகர் வீரர் வஸீம் தாஜூடின் கொலை தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளனர்.
முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடமும் அடுத்த வாரத்தில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
மேலும், புலனாய்வுப் பிரிவினர் தற்போதைக்கு திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
விசாரணைகளில் கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையில் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பித்து நாமல் ராஜபக்ச மற்றம் அனுர சேனாநாயக்க ஆகியோரை கைது செய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக மேலும் புலனாய்வு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.