‘வஸ்தி’ என்பது சமூக வலைதளத்தினூடாக மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்றப்படும் இருவர் என்றால் மிகையாகாது. அனுஷ்க மற்றும் துலாஜ் ஆகிய இருவரும் தான் ‘வஸ்தி’ உரிமையாளர்கள்.
இவர்களில் அனுஷ்க அண்மையில் டெங்கு நோய்க்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவருவது யாவரும் அறிந்ததே.
இந்நிலையில் அனுஷ்க அவர் அரசியலில் களமிறங்கி எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் டெங்கு நுளம்புச் சின்னத்தில் களமிறங்க உள்ளதாக தனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
