வாகன அனுமதிபத்திரங்களை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரயோக பரீட்சையினை மிகவும் தரமான மற்றும் பயனுள்ள வகையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
குறித்த செயன்முறை தொடர்பில் ஆராய அதுகுறித்த அறிக்கையொன்றினை பெற்றுக் கொள்வதற்கு உரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அடங்கிய அதிகாரிகள் குழுவொன்றினை நியமிப்பது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.