எதிர்வரும் காலத்தில் வாகன பதிவுகளை தனியார் பிரிவினருக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்கள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆவண காப்பகத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,ஈ மோடரின் திட்டம் வந்த பின்னர் மகிழூர்தி பாவனையாளர்களுக்கு பாரிய நன்மைகள் ஏற்படும் எனவும், . இடைத்தரகர்கள்தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஏனென்றால் அதனை தனியார் பிரிவினர் செய்கின்றனர் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.