வாகன விபத்தில் ஒருவர் பலி – சாரதி கைது..

ஆராச்சிக்கட்டு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொரியுடன் மோட்டார் சைக்கிளில் ஒன்று மோதியதில் குறித்த இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிள் சாரதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவரை தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ள நிலையில், குறித்த நபர் பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொரி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

(rizmira)