வாகன விபத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) ஆணமடுவ – பங்தெனிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்தில் பலத்த காயமடைந்த குறித்த உத்தியோகத்தர் ஆணமடுவ வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஆணமடுவ – கெதென்னேவ பிரதேசத்தினை சேர்ந்த 31 வயதுடைய உத்தியோகஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஆண்மடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.