நடைபெற்று முடிந்த 2015 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமது கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விஷேடமாக ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களுக்கும் தனக்கு வாக்களித்த குருநாகலை மாவட்ட மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
எந்தவித சவால்களை எதிர்கொண்ட போதிலும் தம்மோடு இருந்த மக்களுக்கு இந்த நேரத்தில் தனது நன்றிகளைத் தெரிவிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
(riz)