வாட்ஸ்அப் இணை நிறுவனர் ஜேன் கோயம் பதவி விலகுகிறார்…

பேஸ்புக் விவகாரத்தில் தனது தனிப்பட்ட வாதம் ஏற்கப்படவில்லை என்பதால் வாட்ஸ்அப்பின் இணை நிறுவனர் பதவியில் இருந்து விலகுவதாக ஜேன் கோயம் அறிவித்துள்ளார்.

‘வாட்ஸ்அப்’ பின் இணை நிறுவனராக ஜேன் கோயம் பதவி வகித்து வருகிறார். இவர் உக்ரைனை சேர்ந்தவர்.

‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தின் துணை நிறுவனமாக ‘வாட்ஸ் அப்’ உள்ளது. இது கடந்த 2009-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பது. அதை கடந்த 2014-ம் ஆண்டு ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் கோடிக்கு ‘பேஸ்புக்’ நிறுவனம் வாங்கியமை குறிப்பிடத்தக்கது.