வாழைப்பழம் விநியோகித்தவருக்கு CID அழைப்பு

காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்கவின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றைப் பயன்படுத்தி, வெள்ள அனர்த்தத்தில் வாழைப்பழம் விநியோகித்ததாகக் கூறப்படும் சந்தேகநபரை, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.  

இச்சம்பவம் தொடர்பில், அமைச்சர் கயந்த கருணாதிலக்க செய்த முறைப்பாட்டையடுத்தே, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

இதற்கமைய, எதிர்வரும் 28ஆம் திகதியின் பின்னர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுவதாக, குறித்த நபர் தனது சட்டத்தரணி ஊடாக திணைக்களத்துக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.