வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் புதிய அரசியல் கட்சியான “தமிழ் மக்கள் கூட்டணி” என்ற கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபையின் ஆயுட்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் பிரவேசம் தொடர்பில் அவர் இதன்போது கருத்து வெளியிட்டுள்ளார்.
அதனடிப்படையில் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அவர் இதன்போது கருத்து வெளியிட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.