விசேட சுற்றிவளைப்பில் 527 பேர் கைது…

(FASTNEWS|COLOMBO) மேல் மாகாணத்தில் இரண்டு தினங்களாக மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கைது செய்யப்பட்டவர்களில் பல சட்டத்தரணிகள், வைத்தியர்கள் மற்றும் முன்னணி வர்த்தகர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன. இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை அடுத்த வரும் சில தினங்களில் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

களியாட்ட நிகழ்வுகளுக்கு சென்றவர்கள் மதுபோதையுடன் வாகனங்களை செலுத்துவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், இதுபோன்ற விசேட பொலிஸ் நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் இடம்பெறும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.