விசேட தெரிவுக்குழுவின் விசாரணையின் போது ஊடகங்களுக்கு தடை

(FASTGOSSIP | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழுவின் விசாரணையின் போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான தகவல்கள் முன்வைக்கப்படும் போது, ஊடகங்களை அனுமதிக்காமல் இருப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவுக்குவின் பதில் தலைவர் ஜயம்பதி விக்கிரமரத்ன தலைமையிலான தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள், சபாநாயகர் கருஜயசூரியவை, நேற்று(12) சந்தித்துப்பேசி, மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.