மன்னார் மறைமாவட்டத்தின் புனித தலமான மடுத் திருத்தலத்தின் திருவிழா நாளை (15) சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
திருகோணமலை – மட்டக்களப்பு மடு திருத்தலத்திற்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கான விசேட ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய இன்று (14) முற்பகல் முதல் நீர்கொழும்பிலிருந்து மடு வரை விசேட ரயில் சேவையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது.
இதுதவிர நாளைய தினமும் நீர்கொழும்பிலிருந்து ரயில் சேவையொன்றை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.