(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால செயற்பாடு குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனை இதுவரை கிடைக்கபெறவில்லை என கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு இன்று நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியது.
2018 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொதுகூட்டம் ஒன்றின் போது, தமிழீழ விடுதலைப்புலிகள் மீள கட்டியெழுப்பபட வேண்டும் என்ற வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பான முறைப்பாடு இன்று கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்சன கெக்குனுவெல முன்னிலையில் ஆராயப்பட்ட போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.