(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா ) – மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கு இடையேயான சண்டைக்காட்சிகள் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. சுரங்கப்பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை அழைத்து சென்றதால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.