(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள அதிபர்,ஆசிரியர்கள் தமது விடுமுறையை அலுவலகங்களுக்கு அறிவிக்கும் பொருட்டு, தந்தி அனுப்புவதற்காக தபால் நிலையங்களுக்குச் சென்றனர்.
ஹட்டன் பிரதான தபாலகத்தில் அதிகளவிலான அதிபர்,ஆசிரியர்கள் குவிந்தமையாலே இங்கு சன நெரிசல் ஏற்பட்டதையடுத்து ஹட்டன் தபாலகத்தில் தந்திச் சேவையை துரிதப்படுத்த அஞ்சல் அலுவலகத்தில் மேலதிக உத்தியோகத்தர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டனர்.