விடுமுறையை இரு வாரம் நீடிக்க கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச பொது விடுமுறையினை இரு வாரங்களுக்கு நீடிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்.  

மேலும், அனைத்து துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை இரு வாரங்களுக்கு மூடி சுகாதார முன்னேற்பாடுகளை செய்வது நல்லதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசிடம் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளது.