விண்கற்கள் மழை பொழியும் சாத்தியம்

(FASTNEWS|COLOMBO) – எதிர்வரும் நாட்களில் இலங்கையின் வான்பரப்பில் விண்கற்கள் மழை பொழியும் சாத்தியங்கள் உள்ளதாக வானியல் ஆய்வாளர் கீர்த்தி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

விண்கற்கள் மழையை இலங்கையர்களும் அவதானிக்க முடியும் எனவும், எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் இறுதி வரை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை காண்பதற்கு இலங்கை மக்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதுடன், அதுவொரு ஆச்சரியமிக்க அனுபவமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.