விண்வெளித் தகவல்களிலேயே வரலாற்றில் முதல் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இவை பூமியில் இருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் நீர் மற்றும் வாழக்கூடிய தன்மைகள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என பெல்ஜியம் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் மைக்கேல் கில்லான் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வானியல் ஆரய்ச்சியாளர்கள் ஏழு கோள்களை கண்டுபிடித்துள்ளனர்.
எனினும், அவை அனைத்தும் பூமியின் அளவில் இருக்கவில்லை.
இதனால் பூமி அளவு கொண்ட ஏழு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கோள்களும் ஒரே சுற்றுப் பாதையில் பயணிக்கிறது என்பதால் இவற்றின் ஒரு பகுதியில் நீர் இருப்பதற்கான சாத்தியம் அதிகம் என கூறப்படுகிறது.
புதிய கோள்கள் குறித்து ஓரளவு தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், அதில் மனிதன் வாழக் கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றதா என்பது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


[youtube url=”https://www.youtube.com/watch?v=bnKFaAS30X8″ width=”560″ height=”315″]