வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு யாழ். புங்குடுதீவில் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவிற்கு நேற்று புத்தளம் ஒற்றைப்பனை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவர்களினால் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தி, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
நேற்று காலை 7.30 முதல் 8 மணி வரை பாடசாலையின் மைதானத்தில் நடைபெற்ற காலைக் கூட்டத்தை தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி மாணவர்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
வித்தியாவிற்கு மாணவர்கள் மௌன அஞ்சலி