வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்  சுவிஸ் குமாரை பர்ர்கச்சென்ற விஜயகலா மகேஸ்வரன் சிக்கலில்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் இடம்பெற்ற போது, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் காணொளி ஒன்றை காண்பித்தனர்.
அந்தக் காணொளியில் சுவிஸ்குமாரை மக்கள் கட்டி வைத்திருந்த போது இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அங்கு சென்று பார்வையிடும் காட்சிகள் அடங்கியிருந்தன.
இதை தொடர்ந்து குறித்த காணொளி தொடர்பில் விசாரணை நடத்தி அடுத்த வழக்குத் தவணையின் போது அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.