மிரட்டிய குற்றச்சாட்டில் சிறையில் வைக்கப்பட்டிருந்த சுவிஸ் குமாரின் தாயார் இன்று(18) மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை மிரட்டிய குற்றச்சாட்டில் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எனும் சந்தேகநபரின் தாயார் மற்றும் அவரது உறவினர் ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.