பாணந்துறை பிரதேசத்தில் இ.போ.ச. பஸ் ஒன்றில் பயணம் செய்த தாயும் மகளும் பாணந்துறை வந்துராமுல்ல சந்தியில் பஸ்ஸை விட்டு இறங்கியபோது பஸ்ஸின் பின் சில்லில் சிக்கி படுகாயமுற்று அதே இடத்தில் தாய் உயிரிழந்ததுடன் மகள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கடந்த 2 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்தில் 30 வயதுப் பெண் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவரது ஆறு வயதான மகள் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேவேளை உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பெற்றுக் கொள்ள கணவன் எனக் கூறிக் கொண்ட மூவர் முன்வந்திருப்பது பிரச்சினையாக இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பஸ் வண்டியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.