விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் மகள் பலி…

(FASTNEWS| COLOMBO)- குருணாகல் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது 02 வயது மகளும் உயிரிழந்துள்ளதோடு 03 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குருணாகல், சாரகம வாவிக்கு அருகில் முச்சக்கர வண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார் ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 30 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரும் அவரது 02 வயது மகளும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.