விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசாங்க வாகனத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிலேயே இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.