விமல் வீரவன்சவின் மனைவி சஷிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போலி கடவுச்சீட்டு வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு இரண்டு வருடகால கடூழிய சிறைத்தண்டணையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் சற்று நேரத்துக்கு முன் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
சட்டவிரோதமாக கடவுச்சீட்டு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த தண்டனையை வழங்கப்பட்டிருக்கிறது